ஆப்நகரம்

தமிழில் இனி குடமுழுக்கு, இல்லை என்றால் 10 லட்சம் ஃபைன்: ஐகோர்ட் கிளை!

தமிழ் மொழியிலும் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Dec 2020, 8:53 pm
இனி இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் தமிழிலும் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும்.
Samayam Tamil தமிழில் இனி குடமுழுக்கு, இல்லை என்றால் 10 லட்சம் ஃபைன்: ஐகோர் கிளை!
தமிழில் இனி குடமுழுக்கு, இல்லை என்றால் 10 லட்சம் ஃபைன்: ஐகோர் கிளை!


இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுக்கப்படும் என்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவைப் பிறபித்துள்ளனர்.

வெள்ளிக் கிழமை பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் இப்போது இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. முன்னதாக தஞ்சை குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவு ஒன்றைப் பிறபித்திருந்தது.

புரெவி விடுமுறை எப்போது? அமைச்சர் சொன்ன பதில் இதுதான்!

தமிழ்நாட்டில் ஆகம விதிகளை பெரும்பாலான கோயில்கள் பின்பற்றுவதில்லை என்றும், சமஸ்கிருத மொழியில்தான் மந்திரங்களை ஓதி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இது தொடர்பாகத் தமிழ் ஆர்வலர்கள் இத்தனை நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போது வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பு மொழி ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே, நீதிமன்றத்தில் தமிழ் பொதிகை சேணலில் சமஸ்கிருத செய்தி வாசிப்பதற்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி