ஆப்நகரம்

Amma Mini Clinic Madurai: அம்மா மினி கிளினிக் பணி நியமனம்...கோர்ட் அதிரடி உத்தரவு!

மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக்குகளுக்கான மருத்துவப் பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டால் அவை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 7:03 pm
மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் அம்மா மினி கிளினிக்குகளில் பணி நியமனம் தொடர்பாக ,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil கோப்பு படம்


இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த மதுரைக் கிளை, மினி கிளினிக்குகளில் மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

சரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு!

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், " 2,000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர் நியமனம் என்பது தற்காலிகமாகவே நடைபெற்று வருகிறது.

மேலும் மத்திய சுகாதார மையத்தின் வழிகாட்டலின் அடிப்படையில், மாவட்ட சுகாதார மையங்கள் வழியாகவே நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. உரிய விதிகளுக்குட்பட்டே நியமனங்கள் நடைபெற்று வருகின்றன" என தெரிவித்தார்.

ஸ்டாலினை முதல்வராக்க வேட்பாளர்கள் பிகாரில் இருந்துதான் வரணும்...அமைச்சர் கிண்டல்!

இவற்றில் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், " கொரோனா நோய்த்தொற்று அவசர காலத்தை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளபடி மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே மினி கிளினிக்குகளுக்கான மருத்துவப் பணியாளர் நியமனம் நடைபெற வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலமாக நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அவை செல்லாது" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அடுத்த செய்தி