ஆப்நகரம்

எய்ம்ஸ் காணவில்லை: மோடி தொடங்கிய படத்தோடு போஸ்டரால் சர்ச்சை!

பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்தால் பரிசுத்தொகை என மதுரை முழுவதிலும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Dec 2020, 7:57 pm
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளைப் பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டி வைத்தார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி என 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டது.
Samayam Tamil ஏய்ம்ஸ் காணவில்லை: மோடி தொடங்கிய படத்தோடு போஸ்டரால் சர்ச்சை!
ஏய்ம்ஸ் காணவில்லை: மோடி தொடங்கிய படத்தோடு போஸ்டரால் சர்ச்சை!


அதன்பின் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பணிகள் தொய்வாக நடைபெற்றுவருகிறது.

இந்த சூழலில், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என செல்போன் எண்ணைக் குறிப்பிடப்பட்டு எங்கே எய்ம்ஸ்? என்ற கேள்விக் குறி வாசகங்களோடு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கண்ணகி விமானம் நிலையம்தான் மதுரைக்கு வேண்டும்: சாதி அமைப்பு தலைவர் வலியுறுத்தல்!

குறிப்பாக இந்த போஸ்டர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி