ஆப்நகரம்

சாட்டை துரைமுருகன் ஜாமீன் மனு ரத்து... சோஷியல் மீடியாக்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சாட்டை துரைமுருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jun 2022, 6:17 pm
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் நீதிமன்றம் வரை சென்று ஜாமீனில் வெளியே வந்தார்.
Samayam Tamil sattai durai murugan


ஜாமீனில் வெளி வந்த பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிலரை அவதூறாக பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறியது உறுதியாகிறது. ஆகவே அவரது ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக கூறினார்.
மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு திருப்பணி; வல்லுநர் குழு 2 நாட்கள் ஆய்வு!

மேலும், அவதூறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் பொழுது வீடியோவை அகற்றுவது தொடர்பாக வலைதளம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களும் குற்றவாளிகளே என்று கூறிய நீதிபதி, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் வீடியோக்களை அகற்றலாம் என்றும்,சமூக வலைதள குற்றங்களை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி