ஆப்நகரம்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலி சாமியார் கடத்தப்பட்ட வழக்கு!

போலி சாமியார் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 8 Feb 2023, 3:56 pm
சாமியார் வேடத்தில் உள்ள உமையாலிங்கம் விருதுநகர் மற்றும் கோவில்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Samayam Tamil madurai court


கோவில்பட்டியில் உமையாலிங்கம் என்ற வாலிபர் கோவில் ஒன்று கட்டி அதில் சாமியாராக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இவரை சிலர் காரில் கடத்தி சென்றனர். பின்னர் சாமியாரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். பின்னர் கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த சதீஷ், ரவிக்குமார், மாரியப்பன், செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

ஈரோடு கிழக்கு : ஓட்டுக்கு இவ்வளவா? தொகுதி ஹாட் களநிலவரம் இது தான்!

இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சதீஷ், ரவிக்குமார், மாரியப்பன், செல்வம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார் இந்த போலி சாமியார் மீது விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என வாதிட்டார்.

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் ரேஸ்: இறையன்பு குறி வைக்கும் பதவி!

இதனை பதிவு செய்த நீதிபதி போலி சாமியார் கடத்தப்பட்டதாக கூறிய வழக்கில் 4 நபர்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டு நான்கு நபர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி