ஆப்நகரம்

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை, மதுரை மாநகரில் 20 போ், புகரில் 25 போ் என மொத்தம் 45 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Samayam Tamil 23 Jan 2021, 5:39 am
டெங்கு காய்ச்சல் பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரையில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil Dengue (File Pic)


மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலேஷ். சில தினங்களாகக் காய்ச்சல் இருந்த நிலையில், பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டன. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக மதுரை மண்டல சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, “தனியாா் மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்ததையடுத்து, அவா் வசித்த பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள், தங்களை காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவேண்டும்.

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

ஜனவரி மாதத்தில் தற்போது வரை, மதுரை மாநகரில் 20 போ், புகரில் 25 போ் என மொத்தம் 45 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

அடுத்த செய்தி