ஆப்நகரம்

Free Fire வன்முறையை தூண்டுகிறது- மதுரை ஐகோர்ட் வேதனை!

பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் மொபைல் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 27 Sep 2022, 4:36 pm

ஹைலைட்ஸ்:

  • பிரீ பையர் விளையாட்டு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை
  • ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்
  • முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil madurai court
பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைல் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என பிரீ பையர் விளையாட்டு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும் அதில், ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

வளரும் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே, எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்; கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பது இளைய தலைமுறைக்கு சோதனை கால கட்டமாகவே அமைந்தது. ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற பொழுது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளனர்.

இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர். தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு: காரணம் யார் என முதல்வருக்கு தெரியும்- வானதி சீனிவாசன்!

தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. பிரீ பையர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

இந்த வழக்கில் காணாமல் போன பெண், பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம், பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு எந்த விதமான இடையூறும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி