ஆப்நகரம்

பூட்டிக் கிடந்த கள்ளழகர் கோயில் நந்தவனம் தயார்...

கள்ளழகர் கோவில் நிர்வாக அதிகாரி அனிதாவின் தீவிர முயற்சியால் ஆடி வீதி புனரமைக்கப்பட்டது.

Samayam Tamil 2 Jan 2021, 10:34 am
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள ஆடி வீதியில், திருச்சுற்று சுற்றி வழிபாடு செய்ய வசதியாக, மூலிகை, மலர் செடிகள் சூழ்ந்த நந்தவனம் பல்லாண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kallalagar


108வைணவ ஸ்தலங்களில் ஒன்றான தென்திருப்பதி என அழைக்கப்படும் திருமாலிஞ்சோலை கள்ளழகர் திருக்கோவில் உள்ள ஆடி வீதியில் பக்தர்கள் திருச்சுற்று சுற்றி வழிபாடு செய்தால் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.

இந்நிலையில் கோவிலை சுற்றிய ஆடி வீதியில் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து பொழுது வீணாக்கியும், வீதியை அசுத்தப்படுத்தியும் வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கள்ளழகர் கோவில் நிர்வாக அதிகாரி அனிதாவின் தீவிர முயற்சியால் ஆடி வீதி புனரமைக்கப்பட்டு ஆடி வீதிகளில் பக்தர்கள் திருச்சுற்று சுற்றி வழிபாடு செய்யும் வகையில் நடைபாதையை உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாடச் சென்றவர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

பக்தர்கள் வலம் வரும்போது இரு பக்கமும் இயற்கை சூழலை உருவாக்கும் வகையில் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகளையும், வாசனைமிகுந்த வண்ண மலர்களை பூக்கும் ஆயிரக்கணக்கான செடிகளையும் நட்டு நந்தவனமாக உருவாக்கியுள்ளார். இந்த திருச்சுற்று நந்தவனம் இன்று கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்துவைத்தனர்.

பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த திருச்சுற்று பகுதியான ஆடி வீதியை புனரமைத்து நந்தவனமாக மாற்றிய கோவில் அதிகாரிகளை பக்தர்கள் பாராட்டிசென்றனர். கொரோனா பரவலில் முக்கிய பங்கு வகிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கோவிலை சுற்றி வர ஏற்பாடு செய்துள்ளதோடு மூலிகை செடிகளும் நடப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

புதிய நந்தவனம் அமைப்பு முயற்சி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி