ஆப்நகரம்

சீட்டு கட்டு ஆடுறீங்களா? சிக்குனா கம்பி தான்… மதுரை எஸ்.பி எச்சரிக்கை!

சூதாட்டம் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2022, 12:54 pm

ஹைலைட்ஸ்:

  • சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
  • மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
  • பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 நபர்கள் கைது

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
எஸ்.பி பாஸ்கரன்
மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு, தங்கள் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் எவ்வகையிலும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக்கூடாது என்று காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதன் அடிப்படையில் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடங்களில் உரிய கண்காணிப்பு செய்து அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


உத்தரவின் அடிப்படையில்அலங்காநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இளங்கோவன், போலீசாருடன் ஆரியூர் கண்மாய் அருகே ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுக்கள்- 52, பணம் ரூ. 14,010 பறிமுதல் செய்து, அவர்கள் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்... காரணம் இதுதான்!

மேலும் சூதாட்டம் ஒரு கொடிய சமூக பிரச்சனை என்பதை உணர்ந்து, சூதாட்டத்தில் பல குடும்பங்கள் தங்கள் ஒளிமயமான வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி