ஆப்நகரம்

குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை தொல்லை... உசிலம்பட்டி வாலிபர் கைது

உசிலம்பட்டி அருகே பத்து வயது சிறுவனுக்கு ஓரினசேர்க்கையில் ஈடுபட தொல்லை கொடுத்த வாலிபரை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 27 Jan 2021, 11:09 am
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் வண்டி முத்தையா.
Samayam Tamil homosex M-M


இருபது வயதுடைய இந்த வாலிபர் அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்து வயது சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நிலையில் சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிந்துபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிந்துப்பட்டி போலிசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வண்டி முத்தையாவை கைது செய்து திருமங்கலம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஓரின சேர்க்கை விவகாரம்: பள்ளி மாணவி தற்கொலை

திருமங்கலம் அனைத்து மகளீர் காவல் நிலைய போலிசார் வண்டி முத்தையா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி