ஆப்நகரம்

கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டம் வழக்கு 8ஆம் தேதி தெரியும்!

வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினரையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Mar 2021, 5:00 pm
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிரான போராட்டம் தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டம் வழக்கு 8ஆம் தேதி தெரியும்!


மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2018 மே 23ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் கூறி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலோ எவ்விதமான செயல்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆகவே தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிடிஆர் தொகுதியைத் தாரைவார்த்த அதிமுக: திமுகதான் ஜெயிக்கும் எனக் கருத்து!

இந்த வழக்கு இன்று நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி சிபிசிஐடி காவல் துறையினரையும் வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி