ஆப்நகரம்

குளியலறையில் பிணமாக கிடந்த மதுரை கிரானைட் குவாரி ஓனர்: யார் காரணம்?

மதுரை மேலூரில் கிரானைட் குவாரி உரிமையாளர் குளிக்குச் செல்லும் இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Nov 2020, 10:40 am
மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரியின் உரிமையாளர், தங்கியிருந்த அறையில் உள்ள குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். குவாரி உரிமையாளர் சடலத்தை மீட்டுள்ள மேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil குளியலறையில் பிணமாக கிடந்த மதுரை கிரானைட் குவாரி ஓனர்: யார் காரணம்?
குளியலறையில் பிணமாக கிடந்த மதுரை கிரானைட் குவாரி ஓனர்: யார் காரணம்?


மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் பகுதியில் உள்ள தனியார் கட்டிட வளாகம் ஒன்றுள்ளது. இந்த கட்டிடத்தின் அறை எண் 12இல் தனியார் கிரானைட் குவாரி உரிமையாளரான பாலா தங்கியிருந்தார்.

இவர் பெயர் வெ. பாலகிருஷ்ணய்யர். மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி ஏலத்திற்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த சூழலில் மேலே குறிப்பிட்ட அறையில் தங்கியிருந்த பாலா, குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தரமான சம்பவம்: ஐஏஎஸ் என அதிகாரிகளை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை!

பாலா உயிரிழந்து கிடந்தது குறித்துக் கட்டிடத்தின் உரிமையாளர் மேலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மர்மமான முறையில் தொழிலதிபர் ஒருவர், தங்கியிருந்த குளியல் அறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து மேலூர் டிஎஸ்பி ரகுபதிராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி