ஆப்நகரம்

4 தோட்டாக்கள் ஒரு துப்பாக்கியோடு அசால்ட்டாக மதுரை ஏர்போர்ட் வந்த அரசுப் பணியாளர்!

மதுரை விமான நிலையத்தில் 4 துப்பாக்கி தோட்டாவுடன் வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Samayam Tamil 20 Jun 2021, 11:53 pm
ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னை பயணம் செய்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர்.
Samayam Tamil 4 தோட்டாக்கள் ஒரு துப்பாக்கியோடு அசால்ட்டாக மதுரை ஏர்போர்ட் வந்த அரசுப் பணியாளர்!


குறிப்பிட்டவர்கள் மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் உடைமைகளைச் சோதனை கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அந்த 4 நபர்களில் ஒருவரின் உடைமைகளில் சந்தேகம் அளிக்கும் வகையில் வெடிமருந்து கூடிய பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்தது.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் மதுரை பெருங்குடி போலீசார் குறிப்பிட்ட நபரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

கோழி தகராறில் போலீசின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர்!
அப்போது அவர் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த சக்தி மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர் சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. விசாரணையில் அவரிடம் முறையான ஆவணங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

உரிமம் கொண்டிருந்தாலும் அனுமதியின்றி வெடி மருந்துகளை(துப்பாக்கி, தோட்டாக்கள்) கொண்டு விமானத்தில் பறக்க முயல்வது தண்டனைக்கு உட்பட்டது.

அடுத்த செய்தி