ஆப்நகரம்

மதுரை காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்: மற்றொரு அதிர்ச்சி!

மதுரையில் தனியார் காப்பகத்தில் திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 மாதம் கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Jul 2021, 7:02 pm
மதுரை மாவட்டம் முத்துபபட்டி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 45 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
Samayam Tamil மதுரை காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்: மற்றொரு அதிர்ச்சி!


இந்த பெண் கால் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பெண்ணை பரிசோதித்த மருத்துவர் இவர் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சுப்பிரமணியம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் உள்ளவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் லாரியை விரட்டி செல்லும் சிவகங்கை போலீஸ் வீடியோ போலி: பதிவிட்டவர் கைது!
இந்த சம்பவம் அறிந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து போலீசார் காப்பகத்தில் இருப்பவர்கள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா, அல்லது கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வீட்டிற்குச் சென்று வந்த நிலையில் உறவினர்கள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி