ஆப்நகரம்

சிக்கும் அதிமுக முக்கிய புள்ளி; அமைச்சர் பகீர் தகவல்!

ஊழல் வழக்கில் அடுத்து சிக்க போகும் அதிமுக பெரும்புள்ளி குறித்து தமிழக அமைச்சர் கூறி இருப்பது அதிமுக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 23 Dec 2021, 8:33 pm

ஹைலைட்ஸ்:

  • ஊழல் வழக்கில் அடுத்து சிக்க போகும் அதிமுக பெரும்புள்ளி
  • அதிமுக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது
  • விசராணை குழு அமைப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெறயுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் மூர்த்தி பேட்டி!
தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் தழைகள் வழங்கும் விழாவினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"PACL என்ற தனியார் நிறுவனம் குறைந்த விலைக்கு வீட்டு மனை வழங்குவதாக கூறி இந்தியா முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மோசடியாக பதிவு செய்துள்ளதை லோக்தா கமிட்டி கண்டறிந்தது.

சாப்டர் பள்ளி சேப்டர் க்ளோஸ்; அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி தமிழகத்தில் சில இடங்களில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் சுமார் 3000 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்ததில் மோசடிகள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அது குறித்து முழுமையாக கண்டறிய, விசராணை குழு அமைப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி பெற உள்ளோம். விசாரணை கமிட்டியின் விசாரணையின் போது கடந்த ஆட்சியில் எந்த அரசியல்வாதிகள், எந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது என்ற விபரம் தெரிய வரும்.

பஸ்சில் ஏறிய கலெக்டர்; இலவச டிக்கெட் நீட்டிய கண்டக்டர்!

இதே போல வணிக வரித்துறையிலும் சில மோசடிகள் நடைபெற்றுள்ளன. அது தொடர்பாக கண்டறிந்து விசாரணை நடத்தி, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம்", இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த செய்தி