ஆப்நகரம்

டிவிட்டர் புகாரளித்த இளைஞர்… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் எடுத்த ஆக்ஷன்!

மதுரை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அலைக்கழிக்கப்படுவதாக இளைஞர் ஒருவர் டிவிட்டரில் புகார் அளித்த நிலையில், அவரது புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2022, 10:01 pm
முகமது நசீர் என்ற பெயர் கொண்ட டிவிட்டர் பக்கம் ஒன்றில் இருந்து, மதுரை மாநகராட்சியில் பிறப்புச் சான்று கேட்டு தான் 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்ததாகவும், அப்போது சர்வர் பராமரிப்பு என்று கூறி திருப்பி அனுப்பிய ஊழியர்கள், 15 நாட்கள் கழித்து சென்றபோது பிரிண்டர் வேலை செய்யவில்லை என்று கூறி அழைக்கப்படுவதாக வேதனையுடன் பதிவிட்டுருந்தார்.
Samayam Tamil ptr palanivel thiagarajan
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்


அதில், தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஆகியவற்றை டேக் செய்திருந்தார்.

அந்த டிவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உங்களது சிரமத்திற்கு வருந்துவதோடு, தனது அலுவலகத்தை சேர்ந்த நபர் உங்களை தொடர்பு கொண்டு விரைவில் உங்களது பிரச்சனைக்கு தீர்வு காண உதவுவார் என்றும், நீங்கள் குறிப்பிட்டுள்ள இ - சேவை மையம் கடந்த ஆட்சியின் போது எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னால் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர், மதுரை மாநகராட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து பதில் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிறப்புச் சான்று கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் சான்றிதழ் பெறுவதற்கு மீண்டும் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டியதில்லை எனவும், ஆன்லைன் வாயிலாகவே டவுன்லோடு செய்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கையெப்பமிட்ட நகல் தேவைப்படும் நபர்கள் மட்டும் நேரில் வந்தால் போதுமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி