ஆப்நகரம்

மதுரை சிறுமியை மாமனுக்குக் கட்டி வைக்க முயற்சி: குழந்தை தற்கொலை!

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கைப் பயன்படுத்தி தாய் மாமனுடன் +2 மாணவியைத் திருமணம் செய்ய குடும்பமே முயன்றுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2021, 9:40 pm
மதுரை பாண்டிகோவில் அருகே ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த்-தாமரைச்செல்வி தம்பதியினர். இவர் மகள் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
Samayam Tamil மதுரை சிறுமியை மாமனுக்குக் கட்டி வைக்க முயற்சி: குழந்தை தற்கொலை!


இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தபடி குறிப்பிட்ட சிறுமி ஆன்லைன் மூலமாகப் பாடம் கற்று வந்துள்ளார். ஆனால் சிறுமியின் குடும்பத்தார் அவரை இப்போதே தாய் மாமனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மாணவி தனக்கு விருப்பமின்றி திருமணம் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதால் போலீசார் இந்த குற்ற சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்லைனில் புகாரும் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூற அனுப்பிவைத்துள்ளனர். மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மனநல ஆலோசனை வழங்கிய நிலையில் உறவினரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

சிறுமியை ஏன் திருமணம் செய்த: மதுரை தாயை மகன் கொலை முயற்சி, ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்!
இதன்பின் மாணவி வீடு திரும்பியுள்ளார். இதன்பின் போலீசாரிடம் சிறுமியின் குடும்பத்தார் கொடுத்த தகவல்படி:
வீட்டிற்கு மாணவி நேற்று திரும்பிய நிலையில் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியின் நிலையை அறிய ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

அதிர்ந்துபோன சிறுமியினர் குடும்பத்தார், உறவினர் உதவியுடன் குறிப்பிட்ட அறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று மாணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வந்த கொண்டு வரப்பட்ட சிறுமி உயிரிழந்த நிலையிலிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி