ஆப்நகரம்

கடன் தொல்லை மகளைக் கொன்ற தந்தை: மனைவி போலீசில் புகார்!

மதுரையில் கடன் தொல்லையால் மனைவியுடன் தகராறு ஏற்பட்ட கணவர், தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்த தற்கொலை முயற்சி காரணமாக 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Samayam Tamil 8 Dec 2020, 2:30 pm
மதுரையில் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதில் சிவனேஸ் சென்ற ஒரு ஆண் குழந்தையும் ரித்திகா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
Samayam Tamil கடன் தொல்லை மகளைக் கொன்ற தந்தை: மனைவி போலீசில் புகார்!
கடன் தொல்லை மகளைக் கொன்ற தந்தை: மனைவி போலீசில் புகார்!


ஜெயச்சந்திரன் அந்த பகுதியில் ஸ்டுடியோ, வைத்து நடத்தி வருகிறார். இவர், பலரிடம் ரூ. 5 லட்சம் அளவிற்குக் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்பதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் திங்கட்கிழமையும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சண்டை காரணமாக மனைவி வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கணவர் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் அதைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சூழலில் அதிகாலை வீட்டினுள்ளேயே 3 பேரும் மயங்கிக் கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இரைதேடி வந்த புள்ளி மான் பீதியில் கண்மாயில் நீந்திச் சென்ற காட்சி!

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 2ஆவது குழந்தை ரித்திகா பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தந்தையும் மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனைவி அபிநயா அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயேந்திரன் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாகப் பிள்ளையைக் கொலை செய்த தந்தை குறித்து செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி