ஆப்நகரம்

அரசு சம்பளத்தைக் கண்காணிக்கும் தனியார் சாஃப்ட்வேர் தேவையா?: ஐகோர்ட்டில் விசாரணை!

தமிழ்நாட்டிலுள்ள கருவூலங்களில் புதிய சாஃப்ட்வேர் முறையை அமல்படுத்தத் தடை கோரிய வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 9:55 pm
மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
Samayam Tamil அரசு சம்பளத்தைக் கண்காணிக்கும் தனியார் சாஃப்ட்வேர் தேவையா?: ஐகோர்ட்டில் விசாரணை!
அரசு சம்பளத்தைக் கண்காணிக்கும் தனியார் சாஃப்ட்வேர் தேவையா?: ஐகோர்ட்டில் விசாரணை!

அதில், தமிழ்நாட்டிலுள்ள கருவூலங்களில் தானியங்கி பில் தயாரிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலை 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதித்துறை மூலம் புதிதாக நிதி மற்றும் நிர்வாக சீர் திருத்த என்ற முறையை விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முதற்கட்ட பணிகள் தொடங்கியது. இதன் மூலம் கருவூலங்களில் வழங்கப்படும் ஊதியங்களை அனைத்தும் தனியார் நிறுவனங்களும் கண்காணிக்க வழி வகை உருவாகிறது. இதற்காகத் தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி பணம் கொடுத்துள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் முறையானது முதல் கட்டமாக ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது. இதில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறையைப் பயன்படுத்துவதால் ஆகஸ்ட் 31ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு 20% ஓய்வூதிய பணம் சரியான கணக்கிற்குச் சென்று சேரவில்லை.

சாதி ஆணவம், 15 ஊராட்சித் தலைவர்கள் சித்திரவதை: மதுரை கணக்கு மட்டும்!

இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய சாப்ட்வேர் முறையை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதேபோல் பழைய சாப்ட்வேர் முறையைப் பின்பற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழ்நாடு நீதித்துறைச் செயலர் மற்றும் தமிழ்நாடு கருவூல ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி