ஆப்நகரம்

மதுரையின் முக்கிய இடங்களில் வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம்; பீதியில் பொதுமக்கள்...!

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வீலிங் செய்து ரிலீஸ் பதிவிடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Apr 2023, 11:15 pm

ஹைலைட்ஸ்:

  • மதுரையின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் அட்டகாசம்
  • இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து வீடியோ பதிவிடும் பழக்கம்
  • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மதுரையின் முக்கிய இடங்களில் வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம்
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வீலிங் செய்து ரிலீஸ் பதிவிடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரையின் முக்கிய இடங்களில் வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம்:

நம்முடைய அன்றாட வாழ்வில் ஒன்றிப்போனது இருசக்கர வாகனம். ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப, தங்களது தேவைக்கேற்ப வாகனங்கள் வாங்கி பயணம் செய்து வரக்கூடிய நிலையில், சமீபகாலமாக அதிக சிசி கொண்ட வாகனங்களை வாங்குவதும், அவற்றில் அதிவேகமாக சென்று விபத்துக்களை ஏற்படுத்துவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
குறிப்பாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இளைஞர்கள், விபத்துக்குள்ளாகி 108-ல் வரக்கூடிய ஒரு நிலை தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தாங்கள் வைத்திருக்கக்கூடிய வாகனத்தை புகைப்படம் எடுப்பதும், அதில் அதிவேகமாக செல்வது போன்று வீடியோக்களும் பதிவிட்டு வருவது இன்றைய ட்ரெண்டாகி வரக்கூடிய நிலையில், மதுரையைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம் ஒன்று மதுரையின் முக்கிய சாலைகள் புறநகர் சாலைகள் மற்றும் கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து, அதை ரிலீஸ் ஆக பதிவிட்டு வருகிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தேவர் சிலையில் இருந்து மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி வரை:

குறிப்பாக மதுரையின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து ஆரம்பித்து அவுட் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் வீலிங் செய்வது மற்றும் மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வீலிங் செய்வது என பெண்கள் முன் கெத்து காட்டுவதற்காக இவர்கள் இவ்வாறு செய்வது பேராபத்தை விளைவிக்கும் என பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

மதுரை வைகை ஆற்றின் கறைகளின் ஓரமும் வீலிங்:

அதேபோன்று மதுரை வைகை ஆற்றின் கறைகளின் ஓரமும் இவர்கள் வீலிங் செய்வது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்ட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு அல்லாது ராமநாதபுரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு சாலை பகுதிகளிலும் ஆபத்தை உணராமல் இவர்கள் வீலிங் செய்வதும், வீலிங் செய்வதற்கு தயாராகுவது போன்ற காட்சிகள், மழை நேரங்களில் வீலிங் செய்வது இப்படியாக தொடர்ந்து இதை ஒரு வேலையாகவே வைத்து, அதை வீடியோ எடுப்பதற்கு ஒரு குழு, எடிட்டிங் செய்வதற்கு ஒரு குழு, ப்ரோமோட் செய்வதற்கு ஒரு குழு என ஒரு கூட்டமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கோவையில் மக்னா யானை அட்டகாசம்; வனத்துறையினரை ஜீப்புடன் கவிழ்த்து பயங்கரம்..!

வாழ்க்கை ஒரு சக்கரம் தான்..

இவ்வாறாக தாங்கள் பதிவு செய்த வீடியோக்கள் பத்தாயிரம் பார்வையாளர்களை கடந்ததற்கு கூட கேக் வெட்டி அதற்கும் ஒரு வீலிங் வீடியோ. வாழ்க்கை ஒரு சக்கரம் தான். ஆனால் வாழ்க்கையை இந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று தொலைத்து விடக்கூடாது என்பது சாமானியர்களின் கோரிக்கையாக இருக்கிறது
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி