ஆப்நகரம்

10 லட்சத்தைத் திருடிய மதுரை பெண் போலீஸ்: பை தொழிலாளி புகாரால் பரபரப்பு!

போலீஸ் ஜீப்பில் வந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ 10 லட்சத்தை பிடுங்கிச் சென்றதாக பதியப்பட்டுள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2021, 5:34 pm
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரைச் சேர்ந்த கொங்கன் மகன் அர்ஷத்(32). இவர் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பை தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.
Samayam Tamil 10 லட்சத்தைத் திருடிய மதுரை பெண் போலீஸ்: பின்னணியில் பகிர் கதை!


இவர் சொந்தமாகத் தொழில் தொடங்கத் திட்டமிட்டு சிறியளவில் தொழிற்சாலையை ரூ 10 லட்சம் மதிப்பில் தொடங்க திட்டமிட்டுள்ளார். வட்டிக்குப் பணம் வாங்கலாம் என முடிவெடுத்த அர்ஷத் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பணம் கொடுக்க ஒப்புக் கொண்ட பாண்டி மதுரை தேனி சாலையில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றுக்கு வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து அர்ஷத் கூறியதாவது
லாட்ஜில் பாண்டியுடனிருந்த 2 பேர் உள்பட 3 பேரும் பணத்திற்க்கு தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாகக் கூறி அரை மணி நேரம் அங்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் என்னை காத்திருக்க சொன்னார்கள்.

மீண்டும் அங்கு வந்தவர்கள் என்னை ஒரு காரில் ஏற்றினர். அப்போது அங்கு போலீஸ் ஜீப் ஒன்று வந்தது. அந்த ஜீப்பில் நாகமலைப் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடன் டிரைவர் ஒருவர் வந்தனர். அவர்கள் நேராக எனது கையிலிருந்த பையைக் கேட்டனர். அவர் கேட்டவுடன் அங்கு பாண்டியுடனிருந்த கார்த்திக் என்னிடமிருந்து பையை பிடுங்கி இன்ஸ்பெக்டர் வசந்தியிடம் கொடுத்தார்.

மதுரை மீனாட்சி கோயில் லட்டு தயாரித்த 92 ஆயிரம் லிட்டம் பழைய எண்ணெய்: பயோடீசலாக மாற்ற தூக்கி சென்ற அதிகாரிகள்!
தொடர்ந்து அவர்கள் எங்கள் அனைவரையும் அந்த போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சிறிது தூரத்தில் ஆட்களில்லாத இடத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விடும்படி மிரட்டல் விடுத்தனர். அப்போதும் நான் அந்த பையில் எனது பணம் ரூ 10 லட்சமிருக்கிறது எனக் கூறினேன். அதற்கு நாளை காவல் நிலையம் வந்து அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி கூறினார்.

ஆனால் நான் காவல் நிலையத்திற்கு மறுநாள் நேரில் சென்று கேட்டதற்குப் பையில் எதுவுமில்லை ஒழுங்காக ஓடிவிடு என இன்ஸ்பெக்டர் வசந்தி மிரட்டல் விடுத்தார். மீண்டும் பணம் கேட்டு வந்தால் கஞ்சா வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவேன் எனக் கூறினார்.

என்ன செய்வதெனத் தெரியாமல் இப்போது நான் மதுரை குற்றப்புனைவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அர்ஷத் கொடுத்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் வசந்தி, தேனியைச் சேர்ந்த பால்பாண்டி, குண்டு பாண்டி, சிலைமானை சேர்ந்த உக்கிரபாண்டி, கார்த்திக் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி