ஆப்நகரம்

மதுரை: போலீசுக்கே லாட்டரி விற்ற முதியவர்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

லாட்டரி சீட்டு விற்பனை செய்பவரை செல்போனில் அழைத்து அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

Samayam Tamil 7 Nov 2020, 8:42 am
மதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வீடுவீடாகச் சென்று விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil kerala-lottery File pic


தமிழகத்தில் லாட்டரீ சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதிகளில் கேரளா லாட்டரி சீட்டுகள் டோர் டெலிவரி முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்பவரை செல்போனில் அழைத்து அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீசார் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த முதியவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசாரிடமே விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது.

சரிந்தது பூக்கள் விலை, மதுரையில் மழையால் நிகழ்ந்த மாயம்!


உடனடியாக கையும் களவுமாக லாட்டரி சீட்டுகளை விற்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் பெரிய ஊர்ச்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் (57) என்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து கட்டு கட்டாக லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு டூவிலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி