மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடை ஒன்றில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை உண்டு எனக் குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் தெருவில் அமைந்துள்ளது மகிழ் இறைச்சிக்கடை. இந்த இறைச்சிக் கடையைச் சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு ஆடு, நாட்டுக்கோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளை உரிமையாளர் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை துவங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் இப்போது ஆடி மாதம் என அதிரடி சலுகை ஒன்றைக் குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். அதன்படி ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து, போஸ்டர் ஒட்டி திருமங்கலம் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தற்போது உள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் 103-ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதில் சுந்தரத்தின் இறைச்சிக் கடையில் ஏற்கனவே ஒரு கிலோ இறைச்சி அறிவிக்கப்பட்ட அதே விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தெருவில் அமைந்துள்ளது மகிழ் இறைச்சிக்கடை. இந்த இறைச்சிக் கடையைச் சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு ஆடு, நாட்டுக்கோழி, வாத்து, முயல், வான்கோழி, காடை, கருப்புக்கோழி, கின்னிக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளை உரிமையாளர் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை துவங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் இப்போது ஆடி மாதம் என அதிரடி சலுகை ஒன்றைக் குறிப்பிட்ட கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். அதன்படி ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து, போஸ்டர் ஒட்டி திருமங்கலம் மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தற்போது உள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் 103-ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதில் சுந்தரத்தின் இறைச்சிக் கடையில் ஏற்கனவே ஒரு கிலோ இறைச்சி அறிவிக்கப்பட்ட அதே விலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.