ஆப்நகரம்

மதுரை கஸ்டெடி டெத், சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!

மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இளைஞர் ரமேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 5:50 pm
மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக புனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் தொடர்ச்சியாக எங்கள் குடும்பத்தினரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை எனும் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.
Samayam Tamil மதுரை கஸ்டெடி டெத், சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!
மதுரை கஸ்டெடி டெத், சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!


இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி எனது இளைய சகோதரர் ரமேஷை சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவு வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாலை எங்கள் வீட்டிலிருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

காவல் துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக எனது சகோதரர் உயிரிழந்துள்ளார். அதன்பின் மாலை 5. 30 மணிக்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என ஏற்கனவே விதியை வகுத்துள்ளது. அப்படியிருந்து உடற்கூறு ஆய்வு இப்படி நடத்தப்பட்டது ஏற்கத்தக்கதல்ல.

சுட்டுப் பிடிக்க உத்தரவு... துப்பாக்கியுடன் சுற்றும் போலீசார், இளைஞர்கள் பீதி!

ஆகவே எனது சகோதரர் ரமேஷின் உடலை மதுரை, தேனி மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூத்த தடயவியல் துறையின் 3 பேராசிரியர்களைக் கொண்ட குழு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று நீதிபதி சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி