ஆப்நகரம்

அழியும் நிலையில் தேவாங்கு: திருச்சி, திண்டுக்கல்லில் சரணாலயம்?

தமிழகத்தில் அரிய வகை வனவிலங்கான தேவாங்கைப் பாதுகாக்கத் திண்டுக்கல், திருச்சி, கரூர் பகுதிகளில் சரணாலயம் அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Feb 2021, 7:22 pm
தேவாங்கு சரணாலயம் மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Samayam Tamil அழியும் நிலையில் தேவாங்கு திருச்சி, திண்டுக்கல்லில் சரணாலயம்?


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் அரிய வகை விலங்கான தேவாங்கு கரூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைவாக இருப்பதால் தேவாங்கு வனப்பகுதியில் வாழ முடியாமல் அழிந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் வன விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை வகுத்துள்ள விதிமுறைகளின் வன விலங்கான தேவாங்கைப் பாதுகாக்க வேண்டும்.

நெல்லை டூ ஸ்ரீசைலம்... மகா சிவராத்திரி நவ ஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் இயக்கம்!

எனவே தேவாங்கைப் பாதுகாக்கத் திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தமிழகத்தில் தேவாங்கு அதிகம் உள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்கக் கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே அரிய வகை வன விலங்கான தேவாங்கைப் பாதுகாக்கத் திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் தேவாங்கு அதிகமுள்ள பகுதிகளில் சரணாலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். எம் சுந்தரேஷ்- ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி