ஆப்நகரம்

பூட்டை உடைத்து ஆட்டய போட்ட திருடர்கள்... சிக்க வைத்த சிசிடிவி!

பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது.

Samayam Tamil 25 Jan 2022, 4:17 pm

ஹைலைட்ஸ்:

  • பல இடங்களில் தொடர் கொள்ளை
  • சிறார் உட்பட 3 பேர் கைது
  • திருடிய பொருட்கள் பறிமுதல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சிசிடிவியில் சிக்கிய திருடன்
மதுரை அருகே கோவில் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறார் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு என்பதால், மதுரை கப்பலூர் கண்ணன் காலனி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.


இதனை பயன்படுத்தி மூன்று பேர் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அங்கிருந்து இரண்டு பேர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். ஒருவர் மட்டும் ஓடித் தப்பிக்க முயன்றபோது, பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த ஒருவரிடம் விசாரணை செய்து தப்பிச்சென்ற இருவரையும் பிடித்த போலீசார், தீவிர விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட தனக்கன்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஜெய சேகர் என்பவர் வீட்டில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதும்,

விமானங்கள் ரத்து… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!

இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி மதுரை தோப்பூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து பித்தளை முருகன் வேல், மற்றும் பித்தளை பொங்க பானை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் கொண்டு திருடர்களைத் தேடி வந்த நிலையில் அந்தத் திருட்டுக்களை செய்தது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் திருப்பரங்குன்றம் மொட்டமலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், சிவா (19) மற்றும் சேகர் (19) என தெரியவந்தது. எனவே அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி