ஆப்நகரம்

முன்விரோதம்... போலீஸ் மீது பைக் ஏற்றிய போலீஸ் கைது

காயமடைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிபிரிவு காவலர் மருத்துவமனையில் அனுமதி.

Samayam Tamil 7 Nov 2020, 2:08 pm
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சார்பு ஆய்வாளர் கமலமுத்து, தலைமை காவலர் நவநீதகிருஷ்ணன், கிரிதரண், கண்ணன் ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில் நேற்று உசிலம்பட்டிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை


இந்நிலையில் இதற்கு காரணம், மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலராக கீழவளவு காவல்நிலையத்தில் பணிபுரிய கூடிய ரமேஷ்கண்ணன் தான் என கருதிய சக காவலரான நவநீதகிருஷ்ணன் காவலர் ரமேஷ் கண்ணன் மீது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து மோதி விபத்தை ஏற்படுத்தி தாக்குதல் நடத்தி அவரது செல்போனை உடைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த காவலர் ரமேஷ்கண்ணன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின்பேரில், மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக காவலர் தாக்கப்பட்டு கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் உடைக்கப்பட்ட சம்பவம் கீழவளவு காவல்நிலையத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

முன்னதாகவே, உதவி ஆய்வாளர் கமலமுத்து மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்து கடந்த வாரம் சுவரொட்டி ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி