ஆப்நகரம்

மக்களே உஷார்: பொங்கல் பரிசுடன் கொரோனாவும் வரும் அபாயம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யத் தொடங்கப்பட்டது. தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அரசு மக்களும் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

Samayam Tamil 4 Jan 2021, 4:52 pm
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 398 நியாயவிலைக்கடைகளில் 8 லட்சத்து 88 ஆயிரத்து 385 தகுதியுள்ள அரிசி அட்டைதாரர்களுக்குத் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் ரூபாய் 2 ஆயிரத்து 500 உடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
Samayam Tamil மக்களே உஷார்: பொங்கல் பரிசுடன் கொரோனாவும் வரும் அபாயம்!
மக்களே உஷார்: பொங்கல் பரிசுடன் கொரோனாவும் வரும் அபாயம்!


ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களின் அடிப்படையில் தனி மனித இடைவெளியை உறுதி செய்து காலை, மாலை என இருவேளைகளில் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

டோக்கன் மூலமாகப் பொங்கல் பரிசை பெற இயலாதவர்கள் வரும் 13ஆம் தேதி அந்தந்த ரேசன்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

பொங்கல் பரிசு வாங்க வந்த பொதுமக்கள் பெரும்பாலானோர், முக கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருக்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை: இப்பவே போட்டி ஃபீல்...

இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அது மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கி விடும் என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி