ஆப்நகரம்

பொங்கலைக் கொண்டாடப் பொங்கல் வைத்த ஆட்டோ டிரைவர்கள்!

மதுரையில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினருக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி பொங்கல் வைத்து போராட்டம்.

Samayam Tamil 12 Jan 2021, 7:27 pm
கொரானா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பெரியளவில் கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தரவுகள் கூறுகின்றன.
Samayam Tamil பொங்கலைக் கொண்டாடப் பொங்கல் வைத்த ஆட்டோ டிரைவர்கள்!
பொங்கலைக் கொண்டாடப் பொங்கல் வைத்த ஆட்டோ டிரைவர்கள்!


இந்த சூழலில், தமிழக அரசு சார்பில் கட்டிடத் தொழிலாளர் நலச் சங்கத்தினருக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதைச் சுட்டிக்காட்டி தங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது ஆட்டோ தொழிலாளர்களைப் புறந்தள்ளுவதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

'தமிழ் வணக்கம்' சொல்ல பொங்கலுக்கு தமிழகம் வரும் ராகுல்!

தொடர்ந்து ஆட்டோ நலச் சங்க தொழிலாளர் சங்கத்தினர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் இருப்பின் தைப்பொங்கலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி