ஆப்நகரம்

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்: மதுரையில் பிரேமலதா அறிவிப்பு!

பிரேமலதா விஜயகாந்த்திடம் வேல் யாத்திரை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் எந்தக் கட்சியையும் சாடாத வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன...

Samayam Tamil 6 Nov 2020, 4:45 pm
விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள பிரேமலதா, விரைவில் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்: மதுரையில் பிரேமலதா அறிவிப்பு!
தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்: மதுரையில் பிரேமலதா அறிவிப்பு!


மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் வேல் யாத்திரை ரத்து செய்தது குறித்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, “பொது மக்களுக்கோ, சட்ட ஒழுங்கு தொடர்பாகவோ, எந்த ஒரு பிரச்சினை ஏற்பட கூடாது, என்பதற்காக அரசாங்கம் தன் கடமையைச் செய்யும்” என்றார்.

இப்படித் தொடங்கிய பிரேமலதா அடுத்ததாக, “எனினும் இந்தத் தடை குறித்த விளக்கத்தைத் தமிழ்நாடு அரசு தர வேண்டும்” எனக் கூறினார். தேமுதிகவின் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த பதில், கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக என 2 கட்சிகளையும் தாக்காத வகையில் அமைந்துள்ளது.

மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லையா? கமல்ஹாசனை விளாசிய மதுரை எம்.பி.!

கூட்டணி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, “ஜனவரி முதல் வாரத்திற்குள், தேமுதிக செயற்குழு கூட்டப்படும். தெளிவான முடிவைத் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்” என்றார்.

இந்தப் பேட்டியின் போது விஜயகாந்த் உடல்நிலை குறித்த நிருபர்களிடம், “கேப்டன் உடல்நிலை நன்றாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்தைப் பார்க்கலாம்” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த செய்தி