ஆப்நகரம்

காம வெறியில் மதுரை விபச்சாரியிடம் சென்ற இளைஞர்: கதவை உடைத்து வந்து போலீஸ் என நடத்தப்பட்ட கொடுமை!

விபச்சார தொழிலில் ஈடுபட்டு பணம் நகையைக் கொள்ளையடித்த காவலர் உள்ளிட்ட 6 பேரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 14 Jul 2021, 1:13 pm
ராமநாதபுரம் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரத்பாபு. இவர் வெளிநாட்டிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார். பெண்களுடன் உடலுறவு வைக்க ஆசைப்பட்ட இவருக்கு மர்ம நபரிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த மர்ம நபர் கொடுத்த தகவல்படி மதுரை கூடல் நகர் அருகே அன்னை கவிதா 2ஆவது தெரு பகுதியில் விபச்சாரம் நடப்பதாக அறிந்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தகாத உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
Samayam Tamil காம வெறியில் மதுரை விபச்சாரியிடம் சென்ற இளைஞர்: கதவை உடைத்து வந்து போலீஸ் என நடத்தப்பட்ட கொடுமை!


சரத்பாபு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் கூடல் நகர் வீட்டில் உறவு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 5 பேர் கும்பல் ஒன்று கதவைத் திறந்து வந்துள்ளனர். உள்ளே வந்த கும்பல் தங்களை விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் எனக் கூறியுள்ளனர். மேலும் அந்த 5 பேரும் இளைஞரிடம் பணம் மற்றும் நகையைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பணம், நகையைப் பறிகொடுத்த இளைஞர் சரத்பாபிற்குத் தொலைப்பேசியில் மீண்டும் ஒரு அழைப்பு நேற்று முன்தினம் வந்துள்ளது. அதில் அதே கும்பல் காவல்துறை விசாரணைக்கு மதுரைக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் அவர்கள் வரும்போது ரூபாய் 20 ஆயிரம் கொண்டு வரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பிடிஆரை கண்டு அஞ்சம் அர்ஜுன் சம்பத்: ஸ்டாலினுக்கு மதுரையிலிருந்து அட்வைஸ்!
இதைக்கேட்டுச் சந்தேகமடைந்த இளைஞர் மதுரை மாநகர ஆட்கடத்தல்பிரிவு காவல்துறைக்குப் புகார் அளித்தார். புகாரையடுத்து இளைஞரை மிரட்டிய கும்பலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த மச்சராஜா, ராஜபிரபு, மதுரை கூடல் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தினகரன், கருப்பாயி, தெய்வானை, தவமணி ஆகியோர் என்பது தெரியவந்தது. 6 பேரில் தினகரன் தப்பிய நிலையில் மீதியுள்ள 5பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

விபச்சார தடுப்பு காவலர்கள் எனக் கூறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி