ஆப்நகரம்

சரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு!

தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்கவும், கடைகள் முன்பாகவும் மதுவின் விலைப்பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Samayam Tamil 21 Jan 2021, 3:48 pm
ரசீது வழங்கியதற்கான நகல் கொண்ட பதிவேடும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அது தொடர்பான ஆய்வுகள் நடைபெறலாம். அவை முறையாகப் பராமரிக்கப்படாத பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறபித்துள்ளனர்.
Samayam Tamil சரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு!
சரக்கு வாங்குனா இனி மறக்காம ரசீது வாங்குங்க: ஐகோர்ட் தீர்ப்பு!


இந்த உத்தரவைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பவும், தவறும் விற்பனை பிரதிநிதிகள் உட்பட எவராயினும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் “மது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ச்சியாகப் பல புகார்கள் எழுந்து வருகின்றன. விலை நிர்ணயம், அதை முறைப்படுத்துதல் தொடர்பாக விதிகள் இருப்பினும், அவை முறையாக அமல்படுத்தப்படுவது போல் தெரியவில்லை.

நூறு சதவீத வாக்குப் பதிவைச் சாத்தியமாக்க ஐகோர்ட்டில் வழக்கு!

ஆகவே, தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகள் முன்பாகவும் விலைப்பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும். அதற்கான நகல் கொண்ட பதிவேடும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அது தொடர்பான ஆய்வுகள் நடைபெறலாம். அவை முறையாகப் பராமரிக்கப்படாத பட்சத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும், இது இந்த உத்தரவு தொடர்பாகவும், கண்டிப்பாக இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பவும், தவறும் விற்பனை பிரதிநிதிகள் உட்பட எவராயினும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்த பிப்ரவரி 6இல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அடுத்த செய்தி