ஆப்நகரம்

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

Samayam Tamil 30 Jan 2022, 1:09 pm
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இந்திரன் கோட்டம் மாத இதழ் துவக்க விழா, இந்திரன் கோட்டம் பதிப்பகம் தொடக்க விழா மற்றும் நான்கு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற வருமானவரித்துறை கமிஷனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இந்திரன் கோட்டம் மாத இதழ் பொறுப்பாசிரியர் பாண்டியன் வரவேற்பு வழங்கினார். இந்திரன் கோட்டம் மாத இதழ் நிறுவனர் மற்றும் ஆசிரியர் கலைமாமணி பேராசிரியர் ஞானசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
Samayam Tamil கோப்புப் படம்


திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் ரவி "தமிழக வரலாற்றில் மன்னர்கள்" எனும் நூல், "பட்டியல் வெளியேற்றம் சமூக விடுதலையும்" நூல், "உலகம் போற்றும் இந்திரன்"என்ற நூலும், இந்திரன் கோட்டம் மாத இதழ்கள் வெளியிடப்பட்டது.
சசிகலா vs டிடிவி தினகரன்: என்ன நடக்கிறது அமமுகவில்?
இந்திரன் கோட்டம் மாத இதழ் கௌரவ ஆசிரியர் தமிழ்மாறன் நன்றி உரை வழங்கினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்களும் கல்வியாளர்களும், அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்,

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

அடுத்த செய்தி