ஆப்நகரம்

மதுரை மதுப்பிரியர்கள் குஷி; டாஸ்மாக் ஊழியர்கள் சோகம் - நடந்தது என்ன?

மதுரை அருகே டாஸ்மாக் குடோனுக்கு சரக்கு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் மதுபாட்டில்கள் சாலையில் சிதறியது. அதனை பொதுமக்கள் பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.

Samayam Tamil 11 May 2022, 7:15 am
மதுரையை அடுத்த மணலூர் பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் லைசன்ஸ் பெற்ற பார்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த பார்களுக்கு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
Samayam Tamil tasmac madurai


மணலூர் குடோனில் இருந்து மதுரையில் உள்ள தனியார் பார் ஒன்றுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுப்பாட்டிகள் சரக்கு வேன் ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்டன. வேன், வீரகனூர் பகுதியில் சென்றபோது திடீரென டயர் வெடித்தது சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், வேனில் இருந்த சரக்கு பாட்டில்கள் அட்டை பெட்டிகளுடன் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால், சாலை முழுவதும் மது வெள்ளமாக ஓடியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்ட உடன் போட்டிப் போட்டுக்கொண்டு உடையாத சரக்கு பாட்டில்களை தேடித் தேடி அளிச்சென்றனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு சிலைமான் காவல்நிலைய போலீசார் சம்பவ மீட்பு பணியில் ஈடுபட்டதோடு போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், தனியார் ஹோட்டல் ஊழியர்களும் சம்பவத்திற்கு வந்து உடையாத மதுபாட்டில்களை சேகரித்து அட்டைப்பெட்டியில் அடிக்கி வைத்தனர்.

விபத்தில் வீணான பாட்டில்கள் அரசுக்கு சொந்தமானது இல்லை என்ற போதிலும், 20 லட்ச ரூபாய் சரக்கு வீணாகிவிட்டதே என டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பியதாக கூறபடுகிறது.

அடுத்த செய்தி