ஆப்நகரம்

சரக்கு வெறியில் டாஸ்மாக் கடையையே சூறையாடிய கும்பல்!

மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர்ப் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Nov 2020, 5:51 pm
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் சந்தோஷ் நகர்ப் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
Samayam Tamil சரக்கு வெறியில் டாஸ்மாக் கடையையே சூறையாடிய கும்பல்!
சரக்கு வெறியில் டாஸ்மாக் கடையையே சூறையாடிய கும்பல்!


இந்த சூழலில் வழக்கம்போல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் விற்பனை முடித்தபின் நேற்று இரவு 10.30 மணி அளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட கடை அமைந்துள்ள பகுதி ஆள்நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பகுதி.

இதை அறிந்த சிலர் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து செல்வதை நோட்டமிட்டுள்ளனர். ஊழியர்கள் சென்றபின் அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர்.

உள்ளே கடையிலிருந்த மதுபான பாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காலை வழக்கம்போல் டாஸ்மாக் ஊழியர்கள் கடையைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது கடையிலிருந்து 237 மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட மதுபான பாட்டில்களின் மொத்த விலை 45 ஆயிரம் ரூபாய் ஆகும்.

கஞ்சா டோர் டெலிவரி மதுரை புள்ளிங்கோ: பொறி வைத்துப் பிடித்த போலீஸ்!

கடை ஊழியர்கள் உடனடியாக சம்பவம் குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்பார்வையாளர் இளையராஜா அவனியாபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் காரணமாக சந்தோஷ் நகர்ப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டுள்ள இந்த கொள்ளை சம்பவம் காரணமாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி