ஆப்நகரம்

வேனுக்கு பின்னாடி பள்ளி மாணவர்கள் செய்த கேவலமான செயல் - வைரலாகும் வீடியோ!

மதுரை ஆத்திக்குளம் ரிசர்வ் லைன் பகுதியில் பள்ளி மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமாக மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 May 2022, 10:00 pm
மதுரை மாவட்டம், ஆத்திக்குளம் ரிசர்வ் லைன் பகுதியில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் அதே பகுதியை சேர்ந்த மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
Samayam Tamil School students clash video viral in madurai


இந்நிலையில் இன்று மதியம் பள்ளி சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்கள் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள கடை வாசல் முன்பாக கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட சீருடை இல்லாமல் சாதாரண உடையில் இருக்கும் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் மாணவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த வேனுக்கு பின்புறம் மாணவர்கள் இருவரை கடுமையாக தாக்குகின்றனர். மேலும், கடை வாசல் முன்பு இருந்த நாற்காலிளை தூக்கிக்கொண்டு ஆக்ரோஷமாக மாணவர்கள் தாக்கிகொள்ளும் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் ஏற்கனவே பள்ளி மாணவிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் மாநகராட்சி கல்விக்குழு விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்ட நிலையில், மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் மாணவர்கள் கடுமையாக தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சம்மந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட தல்லாகுளம் காவல்துறையினர் விசாரித்து மாணவர்களின் இதுபோன்ற மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்த செய்தி