ஆப்நகரம்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீர்: பொதுமக்கள் போராட்ரம்!

மதுரை - திருப்பாலை கிருஷ்ணா நகர் சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 1 Dec 2022, 6:50 pm
மதுரை - திருப்பாலை கிருஷ்ணா நகர் சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துரிதமாக செயல்பட்டு மாநகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்தது.
Samayam Tamil சாலையில் கழிவு நீர்
சாலையில் கழிவு நீர்


மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் ஆறாவது வார்டு பகுதியான மதுரை திருப்பாலை அருகே இருக்கக்கூடிய கிருஷ்ணா நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் சேரும் சகதியான காட்சி அளித்த நிலையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அடிக்கடி செல்லக்கூடிய அந்த சாலையில் கழிவுநீரும் ஒன்றோடு ஒன்று கலந்ததால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். காலை நேரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய அந்த சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் உடனடியாக விரைந்து வந்து மாநகராட்சி பணியாளர்களை வரவழைத்து, சாலையை விரைவில் சரி செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் அந்தப் பகுதியில் சாலையில் செல்வதற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்றினர். இதையடுத்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து அந்த பகுதியில் தேங்கியிருந்த நீரை முதற்கட்டமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு முதற்கட்டமாக தற்காலிகமாக அந்த சாலை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தற்காலிக பணிகளை முடித்து விட்டாலும் விரைவில் நிரந்தரமாக இந்த சாலையில் எளிதில் வந்து செல்வதற்கான பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி