ஆப்நகரம்

ஷீரடிக்கு மதுரையிலிருந்து ஸ்பெஷல் ரயில்: சூப்பரான ஆன்மீக சுற்றுலா!

மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக ஷீரடி தாண்டி செல்லும் ஆன்மீக சிறப்பு ரயில் பல்வேறு சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Oct 2021, 10:29 am
மதுரை மாவட்டத்தில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக குரு க்ருபா யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஷீரடிக்கு மதுரையிலிருந்து ஸ்பெஷல் ரயில்: சூப்பரான ஆன்மீக சுற்றுலா!


மதுரை மாவட்டத்தில் புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை- எழும்பூர் வழியாக மகாராஷ்டிரா மாநிலம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபா தரிசனத்திற்கு மட்டுமின்றி பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில்களுக்கு செல்ல ஏதுவாக இந்த ரயில் சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மந்த்ராலயம் சென்று வரலாம்.

“ஜோசப் விஜய் எனும் நான்” மதுரையில் நடிகர் விஜய் அரசியல் எண்டிரிக்கு பெரும் அழைப்பு!
ஏழு நாட்கள் சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூபாய் 7 ஆயிரத்து 60 கட்டணம் பெறப்படும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின்றி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு, யாத்திரை ரயில் இயக்கப்படுவதால் பயணியர் கண்டிப்பாக இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஆன்மீக ரயிலில் முன்பதிவு செய்யும் மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சுற்றூலா தொடர்பான கூடுதல் தகவலுக்கு, ஐஆர்சிடிசி சென்னை அலுவலகத்தை 90031 40680 மதுரை 82879 31977, திருச்சி 82879 31974 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். கூடுதல் தகவலுக்கு irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி