ஆப்நகரம்

நியூ இயர் ஸ்பெஷல்: வருகிறது பாபா ரயில், சிறப்புச் சலுகையில்!

பாபா தரிசன யாத்திரை சிறப்பு ரயில், தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவற்றுடன் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடச் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Dec 2020, 8:44 pm
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 'சிறப்புப் பாபா தரிசன யாத்திரை' சுற்றுலா ரயில் ஒன்றை ஷீரடிக்கு தென்னக ரயில்வே இயக்க உள்ளது.
Samayam Tamil நியூ இயர் ஸ்பெஷல்: வருகிறது பாபா ரயில், சிறப்புச் சலுகையில்!
நியூ இயர் ஸ்பெஷல்: வருகிறது பாபா ரயில், சிறப்புச் சலுகையில்!


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் “ஆங்கிலப் புத்தாண்டு சிறப்புப் பாபா தரிசன யாத்திரை” என்ற பெயரில் சிறப்புச் சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி அன்று திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, எழும்பூர், மந்திராலயம், பண்டரிபுரம் வழியாக ஷீரடி வரை இயக்கப்படுகிறது. மந்திராலயம் குரு ராகவேந்திரர் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன், ஷீரடி சாய்பாபா தரிசனம் ஆகியவை இந்த 6 நாட்கள் சுற்றுலாவில் அடங்கும்.

ரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், சுற்றுலாத் தலங்களில் சாலை வாகன ஏற்பாடு ஆகிய வசதிகளுடன் நபர் ஒருவருக்கு ரூ. 5 ஆயிரத்து 685 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக அரசியல்: கோயில், குளம் சென்று ரஜினி ரசிகர்கள் வேண்டுதல்!

கடந்த நவம்பர் மாதம் கொரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் தீபாவளி கங்கா ஸ்நானம் ரயில் சுற்றுலா நடத்தப்பட்டது. இதில் 480 பயணிகள் தீபாவளி திருநாளைக் காசியில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் "பாரத தரிசன சுற்றுலா" என்ற பெயரில் 370க்கும் மேற்பட்ட ரயில் யாத்திரைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலில் செல்ல திட்டமிடுபவர்கள் மதுரை ரயில்வே சந்திப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் எவரும் இதில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 8287931977 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி