ஆப்நகரம்

சிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது!

மதுரை சோழவந்தான் அருகே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மணமகன் உள்பட 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 25 Nov 2020, 8:41 pm
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த சடையாண்டி. வயது 30. இவர் திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் நடைபெற்றதாகக் குழந்தைகள் நல அமைப்பினருக்குப் புகார் வந்தது.
Samayam Tamil சிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது!
சிறுமியைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டி பாலியல் சித்திரவதை: அப்பா, அம்மா கைது! வ்


புகாரின் அடிப்படையில் உடனடியாக மணமகன் வீட்டிற்குச் சென்ற குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தினர். அதில் 16 வயது சிறுமியைப் பெற்றோர்கள் 30 வயதாகும் சடையாண்டி என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது, பாலியல் ரீதியாகச் சிறுமியைத் துன்புறுத்தி வந்தது உள்ளிட்டவை தெரிய வந்தது.

சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குப்பை லாரிகளுக்கு சிறை: அதிரடி காட்டிய மக்கள்!

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கட்டாய திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோரான தந்தை பரமசாமி, தாய் வள்ளி மயில் ஆகியோரை குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதேபோல் சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மணமகன் சடையாண்டியை போஸ்கோ சட்டத்திலும் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி