அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(AIADMK) ஒன்றியம், நகரம், மாவட்டம், பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளுக்கு உட்கட்சி தேர்தலை அறிவித்து மாவட்டங்கள் தோறும் நடத்தி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் இந்த உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அதிமுக உறுப்பினரான கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனை மீறியும், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 25-ம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் ஆகியோர் நிர்வாகிகள் அளித்த வேட்புமனுவை பெற்றுக்கொண்டனர்.
இதில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட 4 பேர் வேட்பு மனு கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களது மனுக்கள் வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்
இதனால், மதுரை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. செல்லூர் ராஜூவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், செல்லூர் ராஜூ செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லையேல் தாங்களும் போட்டியிடுவோம் என கூறியதாக தெரிகிறது.
மேலும்,இந்த விவகாரத்தை உடனடியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரை கொண்டுச் சென்று தேர்தல் பொறுப்பாளர்கள் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாநகர் பகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்ததற்கு செல்லூர் ராஜூ தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள சில நிர்வாகிகள் அவரை நீக்காவிட்டால் கட்சி வளர்ச்சி பாதைக்கு செல்வது கடினம் என கூறியுள்ளனர். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் செல்லூர் ராஜூ மீண்டும் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!
ஏற்கனவே அதிமுக உட்கட்சி தேர்தல் கண்துடைப்பாக நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே பதவியில் உள்ளவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக மதுரையில் போர்கொடி எழுப்பப்பட்டுள்ளதால் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசிய விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லூர் ராஜூ தற்போது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்ட 4 பேர் வேட்பு மனு கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களது மனுக்கள் வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்
இதனால், மதுரை அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. செல்லூர் ராஜூவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், செல்லூர் ராஜூ செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லையேல் தாங்களும் போட்டியிடுவோம் என கூறியதாக தெரிகிறது.
மேலும்,இந்த விவகாரத்தை உடனடியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரை கொண்டுச் சென்று தேர்தல் பொறுப்பாளர்கள் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாநகர் பகுதியில் அதிமுக வீழ்ச்சியை சந்தித்ததற்கு செல்லூர் ராஜூ தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள சில நிர்வாகிகள் அவரை நீக்காவிட்டால் கட்சி வளர்ச்சி பாதைக்கு செல்வது கடினம் என கூறியுள்ளனர். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் செல்லூர் ராஜூ மீண்டும் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்!
ஏற்கனவே அதிமுக உட்கட்சி தேர்தல் கண்துடைப்பாக நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே பதவியில் உள்ளவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக மதுரையில் போர்கொடி எழுப்பப்பட்டுள்ளதால் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசிய விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லூர் ராஜூ தற்போது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.