இந்தியா முழுவதும் போக்குவரத்து சேவைக்கு ஆணி வேராக இருப்பது ரயில்கள் தான். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களின் பயணம் செய்கின்றனர். அனைத்து வசதிகளுடன் குறைந்த விலையில் பயணம் செய்வதற்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் ரயில் பயணம் மிகவும் சௌகரியமாக இருக்கிறது. பாலம் பராமரிப்பு - ரயில் சேவை ரத்து
எர்ணாகுளம் - திருச்சூர் பிரிவில் கருக்குட்டி மற்றும் சாலக்குடி இடையே உள்ள பாலத்தில் வருகிற 27-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பாலத்தின் பராமரிப்பு பணி ஏறக்குறைய நாள் முழுவதும் நடைபெறுவதால், வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 26 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பயணிகள் ரயிலான திருநெல்வேலி - பாலக்காடு சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அடுத்த நாளான வருகிற 27 ஆம் தேதி பாலக்காடு சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் பாலக்காடு சந்திப்பு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
கீழ்கண்ட ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 27-ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலி - காந்திதாம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு வழியாக இயக்கப்படுவதற்கு மாறாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ரயில் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, ஆலுவா, திருச்சூர் போன்ற நிலையங்களில் நிறுத்தங்களைத் தவிர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மாற்றுப்பாதையில் செல்லும்போது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் - திருச்சூர் பிரிவில் கருக்குட்டி மற்றும் சாலக்குடி இடையே உள்ள பாலத்தில் வருகிற 27-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பாலத்தின் பராமரிப்பு பணி ஏறக்குறைய நாள் முழுவதும் நடைபெறுவதால், வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 26 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பயணிகள் ரயிலான திருநெல்வேலி - பாலக்காடு சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அடுத்த நாளான வருகிற 27 ஆம் தேதி பாலக்காடு சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் பாலக்காடு சந்திப்பு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
கீழ்கண்ட ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 27-ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலி - காந்திதாம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு வழியாக இயக்கப்படுவதற்கு மாறாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ரயில் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, ஆலுவா, திருச்சூர் போன்ற நிலையங்களில் நிறுத்தங்களைத் தவிர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மாற்றுப்பாதையில் செல்லும்போது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.