ஆப்நகரம்

செத்தது யாரு..?: மதுரை போலீஸ் நடத்திய சிறப்பு முகாம்!

மதுரையில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளால், காவல் துறை மீது மக்கள் கொண்டிருக்கும் தேவையற்ற அச்சம் குறைந்துவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Samayam Tamil 23 Nov 2020, 8:31 am
மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் காணாமல் போனவர்கள் மற்றும் ஆதரவற்ற பிரேதங்களின் உறவினர்களை அடையாளம் காணும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Samayam Tamil செத்தது யாரு..?: மதுரை போலீஸ் நடத்திய சிறப்பு முகாம்!
செத்தது யாரு..?: மதுரை போலீஸ் நடத்திய சிறப்பு முகாம்!


மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் காணாமல் போனவர்கள், ஆதரவற்ற பிரேதங்களை உறவினர்களுக்கு அடையாளம் காட்டும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

சாலை விபத்தில் பலியாகும் அடையாளம் தெரியாத நபர்கள், பல வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிக் காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் அடையாளம் கண்டறியும் சிறப்பு முகாம் டிஐஜி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கவர்மெண்ட் கொரோனா சான்று செல்லாது, விமானப் பயணிகள் அவதி!

இந்த முகாமில் பல்வேறு சாலை விபத்துகளில் பலியானவர்கள், ஆதரவின்றி உயிரிழந்த நபர்கள், காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், அனைத்து நகர், புறநகர் காவல் நிலைய அதிகாரிகள் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மூலம் பொது மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே உள்ள உறவு மேம்படும் என்றும் தேவையற்ற அச்சம் குறையும் என்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி