தமிழ்நாடு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம், உரிய பயிற்சி கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பில் மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்களடங்கிய சிறப்புத் தொகுப்பு கொண்ட 13000 புத்தகங்களை வழங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து மதுரை கீழையூர் அரசு நூலகர் நக்கீரன், பெண்கள் & குழந்தைகள் நூலகத்தின் நூலகர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் நூல்களை வழங்கினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிகழ்வில் தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இஆப, நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் ஆகியோரும்
காணொளி வாயிலாக மதுரையில் இருந்து அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் டி.நாகராஜ், எம்.எல்.ஏக்கள் மு.பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜூத் சிங் காலோன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநகராட்சி வளாகங்களில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கலைஞர் 100 ஆண்டு நினைவு நூலகம் அமையும். தனியார் பயிற்சி மையங்களில் கிடைக்கும் கருவி நூல்கள் சுயமாக படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவங்க படுகிறது என்று பேசினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிகழ்வில் தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இஆப, நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் ஆகியோரும்
காணொளி வாயிலாக மதுரையில் இருந்து அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் டி.நாகராஜ், எம்.எல்.ஏக்கள் மு.பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜூத் சிங் காலோன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநகராட்சி வளாகங்களில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கலைஞர் 100 ஆண்டு நினைவு நூலகம் அமையும். தனியார் பயிற்சி மையங்களில் கிடைக்கும் கருவி நூல்கள் சுயமாக படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் துவங்க படுகிறது என்று பேசினார்.