ஆப்நகரம்

Tasmac Holiday: திடீரென வந்தது அதிரடி உத்தரவு; மதுபிரியர்கள் ஷாக்; டாஸ்மாக் 2 நாள் விடுமுறை!

நாளை முதல் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து திடீரென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jun 2022, 8:09 pm
Samayam Tamil டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை
மதுரை மாவட்டம் மேலூா் அருகே இருக்கும் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா் முருகேசன் உள்பட 7 பேரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் விடுதலைக்களம் என்ற நினைவு மண்டபத்தையும், ஊராட்சித் தலைவா் முருகேசன் அரை வடிவ உருவச்சிலையையும் நிறுவி இருக்கின்றனர்.

இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக முக்கிய தலைவா்கள் யாரும் இந்த நினைவிடத்துக்கு வருகை தரவில்லை. இந்நிலையில் மேலவளவு கிராமத்தில் நாளை முருகேசன் மற்றும் 5 நபர்களின் 25வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது.


இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் ஐந்து நபர்களின் 25வது நினைவு தினம் 30-6-2002 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

எனவே அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மேலவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 12 டாஸ்மாக் கடைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.

எனவே இந்த 2 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி