ஆப்நகரம்

கோயில் யானையால் பாகனுக்கு நேர்ந்த சோகம்

திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 24 May 2020, 9:19 pm
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலின் யானை பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
Samayam Tamil elephant


இந்த நிலையில், யானையை அதன் பாகன் வழக்கம்போல் இன்று குளியலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யானை எதிர்பாராதவிதமாக பாகனை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோயில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் மதுரை மாநகர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, இந்த கோயில் யானை பக்தர்கள், பாகனை தாக்கியுள்ள சம்பவங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளன.

ஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள் - ஜனசேனா கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் விசாக திருவிழா, நாளை (மே 25) தொடங்குவுதாக இருந்தது.

பொதுமுடக்கம் காரணமாக விழா ரத்து செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இக்கோயிலின் யானை தாக்கி பாகன் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி