ஆப்நகரம்

2 பெண்களைக் கட்டிப் போட்டு திருடர்கள் செய்த துணிகர சம்பவம்!

மதுரையில், அதிகாலை நேரத்தில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், 2 மூதாட்டிகளைக் கட்டிப் போட்டு நகை பணத்தைக் கொள்ளை அடித்துத் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 8:41 am
மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. வயது 66. இவர் தனது தாய் கமலாவுடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil 2 பெண்களைக் கட்டிப் போட்டு திருடர்கள் செய்த துணிகர சம்பவம்!
2 பெண்களைக் கட்டிப் போட்டு திருடர்கள் செய்த துணிகர சம்பவம்!


இந்நிலையில் இருவரும் திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் அதாவது செவ்வாய்க் கிழமை அதிகாலை, வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த 4 பேர் கும்பல், சரோஜாவையும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டு விட்டு பீரோவில் இருந்த 27 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கமாக 85 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

சேலைகளை கால் இடுக்கில் ஒழிச்சு வச்சு அசால்டா திருடும் பெண்கள்!

ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறும் அவுட்போஸ்ட் பகுதியில் பெரும்பாலும் குடியிருப்புகள் இல்லாத நிலையில் வீட்டிலிருந்த வயதான பெண்களிடம் நடைபெற்ற திரட்டுச் சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தல்லாகுளம் போலீசார் திருட்டு நடந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி