ஆப்நகரம்

மதுரை: புதுமணப் பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து வந்த பட்டதாரி மணமகன்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!

மதுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பட்டதாரி மணமகன், மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Jan 2023, 3:41 pm
காற்று மாசை குறைத்து, பசுமையை காக்க மணப்பெண்ணை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற பட்டதாரி மணமகனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Samayam Tamil மணப்பெண்ணை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற பட்டதாரி மணமகன்
மதுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பட்டதாரி மணமகன், மணமகளை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் கதிர் என்ற கணேஷ். பிஏ பட்டதாரியான இவர், ஆவினில் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கும் சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் நேற்று கிழையூரில் உள்ள திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து திருமணம் முடித்து மண்டபத்தில் இருந்து மணமகன் வீட்டிற்கு புறப்பட்ட மணமக்கள், தாங்கள் முன்னோர்கள் பயணம் செய்ததை நினைவு கூறும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது உறவினர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களையும் ஆச்சரியப்பட வைத்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது மணமகன் கணேஷ் மாட்டு வண்டியை ஓட்ட மணமகள் சிவரஞ்சனி மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு செல்லும் முன்பாக அருகில் நெல் கதிர்களை உலர வைத்துக் கொண்டிருந்த விவசாயிகளிடம் சென்று குவிக்கப்பட்டிருந்த நெல் மணிகளை வணங்கியதுடன், தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையின் காலில் விழுந்து வணங்கி வழிபட்டு வீட்டிற்குள் சென்றனர்.

இது குறித்து மணமகன் கூறும்போது, ஜல்லிக்கட்டு காளை, ரேக்ளா ரேஸ் மாடுகள், சண்டை கிடா மற்றும் சிப்பி பாறை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதால் அவற்றின் மீது தனி பிரியம் உள்ளது. இந்நிலையில் தங்களது முன்னோர்கள் திருமணம் முடித்து மாட்டு வண்டியில் பயணம் செய்தது போல் தானும் திருமணம் முடித்து எனது மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். நவீன மயமான இன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் அதிகரித்து வருவதால், புகையால் காற்று மாசு அதிகரித்து வருகின்றது.

எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..!

அதனைக் குறைத்து பசுமையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன். வேறு நாட்களில் இதுபோன்று விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தால் மக்களின் கவனத்தை ஈர்ப்பது கடினம் என்பதால், திருமணம் முடிந்த கையுடன் மணக்கோளத்தில், வாகன பயன்பாட்டை தவிர்த்து நமது முன்னோர்கள் போல் மாசில்லா மாட்டு வண்டியை பயன்படுத்த திட்டமிட்டேன். அதன்படி நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடித்த கையோடு மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியையும், புதுவித அனுபவத்தையும் அளிக்கின்றது" என்று தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி