ஆப்நகரம்

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு... செய்தியாளர் சந்திப்பில் அலட்சிய பதில்!

சித்திரை திருவிழாவில் பலியானவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 7 May 2023, 8:31 pm
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Samayam Tamil ev velu
ev velu


அமைச்சர் சர்ச்சை பேச்சு

பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம்
மதுரை சித்திரை திருவிழா கூட்டத்தில் விஐபிகளுக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் தான் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து விட்டார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, உடலில் நோய்வாய்பட்டவர்கள் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் மயங்கி விழுத்தான் செய்வார்கள்; தியேட்டருக்கு சென்றால் கூட்டத்தில் மயங்கி விழுதல் போல , உடலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மக்கள் கூடும் இடங்களில் வரக்கூடாது; அதையும் மீறி வருபவர்கள் இவ்வாறு மயங்கி விழுந்து இறக்கிறார்கள் இதற்கு போலீஸ் என்ன செய்ய முடியும். இது துரதிஷ்டவசமானது. என கூறினார்.
சாதித்து காட்டிய சு.வெங்கடேசன் எம்.பி... வாரணாசியில் இருந்து மயிலாடுதுறைக்கு மாற்றம்... என்னனு தெரியணுமா!
ஜல்லிக்கட்டு - மழுப்பல் பதில்

அலங்காநல்லூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலையரங்கத்தில் ஜல்லிக்கட்டு தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜல்லிக்கட்டு கமிட்டி அமைச்சர் மூர்த்தி ஆலோசனையில் ஈடுபட்டு புதிய கலையரங்கத்தில் ஜல்லிக்கட்டு நடவடிக்கை எடுத்தார் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. இங்கே நடத்திக் கொள்ளலாம் என கூறினார்.

இந்த அரசு பொது மக்களுக்கு எதிராக எந்த செயலையும் செய்யாது. எனவே பாரம்பரியமாக அதே இடத்தில் நடைபெற்றாலும் சரிதான்; புதிய கலையரங்கத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினாலும் சரிதான் என்று மழுப்பலாகவும் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி