ஆப்நகரம்

மதுரை விருதுநகரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்: லட்சக்கணக்கான பொருட்கள் மீட்பு!

திருடப்பட்ட பொருட்களான பணம் நகை, எல்இடிடிவி, மொபைல் போன்கள், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள் கொள்ளையர்களிடமிருந்து மீட்பு.

Samayam Tamil 2 Sep 2021, 7:00 pm
திருமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மதுரை விருதுநகரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்: லட்சக்கணக்கான பொருட்கள் மீட்பு!


சமீபகாலமாக மதுரை புறநகர்ப் பகுதியான திருமங்கலம் தாலுகாவில் சித்தாளை, கட்ராம்பட்டி, மைக்குடி, தும்மகுண்டு, பன்னீர்குண்டு, கள்ளிக்குடி சுந்தரம்குண்டு மற்றும் செக்கானூரணி மூனாண்டி பட்டி, கோட்டையூர், சமயநல்லூர், அலங்காநல்லூர், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் பகலில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே இருந்த பணம் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இந்த சூழலில் இந்த தொடர் சம்பவங்கள் குறித்து, “இந்த சம்பவங்களைத் தடுக்கும் விதத்திலும் நடைபெற்ற குற்றங்களைக் கண்டுபிடிக்க நோக்கத்துடன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்... கோர்ட்டில் டைம் கேட்டுள்ள தமிழக அரசு!
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த ராஜா, சுந்தரம் மற்றும் சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி ஆகியோர்கள் எனத் தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான பணம் நகை, எல்இடிடிவி, மொபைல் போன்கள், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம்” எனக் குறியுள்ளது.

அடுத்த செய்தி